Sky News
Saturday, May 17, 2025
  • Login
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
Sky News
No Result
View All Result
Home News

நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

by VGTS
July 28, 2020
in News, Political, Tamil Nadu, Uncategorized
488 5
0
நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!
739
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

டிவி விவாதத்தில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் “அதிமுக தொண்டர்கள் வெளியே வந்தால், பாஜகவினர் வெளியே நடமாட முடியாது” என்று பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில், காலத்தின் குரல் நிகழ்ச்சியில் பேசியதாவது :

10 ஆண்டு காலத்தில் எங்கு எந்த நேரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவோ, ஜாதி மத சாயம் பூசிக் கொண்டு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதும் காவல்துறை தாமாகவே தக்க நடவடிக்கை எடுக்கிறது. அவரவர் இஷ்டத்திற்கு பிரிக்க… அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல. இந்த அரசாங்கம் யார் வீட்டு வேலைக்காரரும் அல்ல. தமிழக அரசாங்கத்தின் அனைத்து பிரிவும் சரியாக செயல்படுகிறது. அதிகாகள் அனைவருமே சிறப்பாகவே செயல்படுகின்றனர். லெட்டர் பேடு கட்சிகள் எங்களை பாராட்ட வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. காவல்துறைக்கு உண்மை எது? பொய் எது என்று தெரியும். தெரிஞ்சுதான் நடவடிக்கை எடுக்கமுடியும். நாடே கொரோனாவால் ஸ்தம்பித்து கிடக்கிறது. இந்த சூழ்நிலையில, இந்த நிலையில் கேவலமாக, தலைவர்கள் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவி துண்டு அணிவிப்பது இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இவர்களை எல்லாம் நாட்டில் நடமாடவே விடக் கூடாது. இவர்கள் எல்லாம் குண்டாசில் போடனும். யார் செய்திருந்தாலும் தவறு தவறுதான். எதற்கு மறைந்த தலைவர்களை அவமானப்படுத்த வேண்டும். இது ஒரு இழிவான செயல். இது தான் அரசியலா? எம்ஜிஆருக்கு காவி மாலையா? காவி என்பது துறவிகளுக்கானது. காவி புனிதமானது தான். அதற்காக அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி மாலை போடுவீங்களா? இது நியாயமா? எம்.ஜி.ஆர் அதிமுகவினரின் இதய தெய்வம். அவர் பாஜகவின் தலைவர் இல்லை. அவரது சிலைக்கு காவித் துண்டு போர்த்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். இது காட்டுமிராண்டித்தனமான செயல். எம்ஜிஆர் சிலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது நியாயமான கருத்து. அவர் என்ன பாஜக தலைவரா? நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?

ஜாக்கிரதை:

எம்ஜிஆரைப் பற்றி, முதல்வரைப் பற்றி பேச பாஜகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜாக்கிரதையாக இருங்க! அண்ணா திமுக தொண்டர்கள் வெளியே வந்தா நீங்க நடமாட்டீங்க ஜாக்கிரதை இவ்வாறு கோவை செல்வராஜ் பேசினார். இதற்கு விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜாக்கிரதையாக இருங்கள் என்ற கோவை செல்வராஜின் வார்த்தையை திரும்பப் பெற வேண்டும் என்றார். மேலும் எம்.ஜி.ஆரை யாரும் இழிவாக பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.

Tags: admkbjpkaalathinkuralnews18
Previous Post

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

Next Post

இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

VGTS

VGTS

Next Post
இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
Call us: +1 234 JEG THEME

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
  • News
  • Political
  • spiritual
  • About
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In